மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 16 பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு...

ஏறாவூர் நாசர்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களது நலன்கருதி வைஎம்சிஏ அமைப்பு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 75 பாடசாலைகளில் சுத்தம் சுகாதார மேம்பாட்டினை நோக்காகக்கொண்டு கைகழுவும் சுயஇயக்க உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 16 பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர்மௌலானா முன்னிலையில் நடைபெற்றது.

பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்எச்எம். றமீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைஎம்சிஏ பொதுச்செயலாளர் ஜெகன் ஜீவராஜ், செயற்பாட்டுச்செயலாளர் எஸ் பெற்றிக் மற்றும் திட்ட உத்தியோகத்தர் வீ. பிரேம்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பாடசாலை அதிபர்களிடம் இதன்போது கைகழுவும் உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இதேவேளை வைஎம்சீஏ அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு, மட்டக்களப்புமேற்கு , கல்குடா மற்றும் மட்டக்களப்பு மத்தி ஆகிய கல்வி வலயங்களில் பின்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள 62 பாடசாலைகளைச் சேர்ந்த இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள 1736 மாணவர்களுக்கு மாதிரிப்பரீட்சைகளை நடாத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பரீட்சைகள் முதற்கட்டமாக வலய மட்டங்களிலும் இறுதியாக மாவட்ட மட்டத்திலும் நடாத்தி மாணவர்களை நெறிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :