மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1083 ஆக அதிகரிப்பு



- அடையாளம் காணப்பட்ட இடங்களின் விபரம் உள்ளே-


ஐ. ஏ. காதிர் கான்-
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1083 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த கொத்தணியில் (09) வெள்ளிக்கிழமை தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் ஐவர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களாவர்.
மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களின் நண்பர்கள் 24 பேர், தொழிற்சாலையில் பணியாற்றுபவர், மேலும் மூவர் தொற்றுக்கு இலக்கான நிலையில், வெள்ளிக்கிழமை (09) அடையாளம் காணப்பட்டனர். இதேவேளை, எவரேனும் ஒருவர் செப்டம்பர் 23 ஆம் திகதியின் பின்னர் மினுவாங்கொடை Brandix தொழிற்சாலையின் ஊழியர்களைச் சந்தித்திருந்தால், PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறும், தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார்.
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் இருந்து அடையாளங்காணப்பட்ட பெருமளவிலானவர்கள் COVID-19 தொற்றுக்கான எவ்வித நோய் அறிகுறிகளும் இன்றி காணப்படுவதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மினுவாங்கொடை - திவுலப்பிட்டியவை அண்மித்து ஆரம்பமான கொரோனா கொத்தணி தற்போது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக, பொது சுகாதார அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
Brandix கொரோனா கொத்தணி பதிவானதன் பின்னர், தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள்.

1. சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை,
2. பொரளை காசல் வீதி பெண்கள் வைத்தியசாலை,
3. ஹொரணை ஆதார வைத்தியசாலை,
4. வத்துபிட்டிவல முதலீட்டு வலயம்,
5. கட்டுநாயக்க முதலீட்டு வலயம்,
6. மினுவாங்கொடை பொலிஸ் நிலையம்,
7. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்,
8. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்,

இது தவிர, தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை திவுலப்பிட்டிய, மினுவாங்கொடை, வெயாங்கொடை, கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிப்பிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொடை, வீரகுல, வெலிவேரிய, பல்லேவெல, யக்கல, ஜா-எல, கந்தானை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், வீடுகளுக்கு அருகாமையிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் சென்று வருவதற்கு, அந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் அனுமதிக்கப்படுவதாக, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :