இந்தியாவில் மாணவர்களைக் கொல்லும் முட்டாள்தனமான நீட்தேர்வு இன்னும் எதற்கு!?

துரை தல்லாகுளத்தில் ஜோதி துர்கா என்ற மாணவி கடந்த வருடம் நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் எடுத்த நிலையில், நாளை நடைபெறும் நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு முன்பாகவே, அரியலூரில் நீட்டுக்கு தயாராகி வந்த விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தர்மபுரியில் மேலும் ஒரு மாணவர் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நீட் தேர்வு எழுத இருந்த தர்மபுரியைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா என்பவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்வு, மாணவர்களை மருத்துவர்களாக மாற்றுவதற்கு பதிலாக பல உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கிறது. விடிந்தால் நீட் தேர்வு என்ற நிலையில் 3 மாணவர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். தன் குழந்தை டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவோடு இருக்கும் இந்த நேரத்தில்தான் அடுத்தடுத்த இறப்புகள் பெற்றோர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை நகரில் வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நீட் வேண்டாம் என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :