அரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் இறக்குமதி செய்வோம் - அமைச்சர் பந்துல

ஐ. ஏ. காதிர் கான்-


ரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அரசியை இறக்குமதி
செய்து, அதனைக் கட்டுப்பாட்டு விலைக்குள் கொண்டு வருவோம் என, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்விதக் காரணத்திற்காகவும் அரிசியின் சில்லறை விலையை மாற்றுவதற்கு எந்தவிதமான எண்ணமும் கிடையாது என்றும் தெரிவித்த அமைச்சர்,
மக்கள் முகங்கொடுத்துள்ள வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அதிகளவிலான நெல்லைச் சேகரித்து அதனைச் சந்தைக்கு விடாமல் சிலர் செயற்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :