கிழக்கு கடற்பரப்பில் வைத்து தீப்பிடித்து எரிந்த எம்.டி நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பல் தற்சமயம் மட்டக்களப்பு கடற்பரப்பிலிருந்து சுமார் 45 மைல் தொலைவில் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலின் தென்பகுதியிலிருந்து எண்ணெய் கடலில் கலந்திருப்பதை கடற்படை உறுதிசெய்துள்ளது.
தொடர்ந்தும் எண்ணெய் கடல்நீரில் கலப்பதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படை குறிப்பிடுகின்றது.
இலங்கை கடற்படை, கடலோரக் காவற்படை, இந்திய கடலோரக் காவற்படை உள்ளிட்டவர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment