பொலிவேரியன் விளையாட்டு மைதான குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை



அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது பொலிவேரியன் அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அப்பிரதேசத்தின் சில முன்னணி விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாக சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக 11 விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றும் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மைதானத்தில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகளை துரிதமாக நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு, சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. சில நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதற்கு முதல்வர் இணக்கம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :