முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் விவகாரம் இழுபறி! ஹக்கீம், ஹரீஸ் கடும் பிரயத்தனம்


சர்ஜுன் லாபீர்-
க்கிய மக்கள் சக்தியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட தேசிய பட்டியல் விவகாரம் உச்சம் தொட்டு இருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய தேசிய பட்டியல் ஆசனத்தை ஐக்கிய மக்கள் சக்தியினால் வழங்குவதில் பாரிய இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தடிப்படையில் தேசிய பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெறும் முயற்சியில் முதல் கட்டமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச்.எம்.எம் ஹரீஸ் ஆகியோர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காரியாலயத்தில் அதன் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று அது முழுமையாக நிறைவடையாமல் இது பற்றி இன்று மாலை இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :