அட்டாளைச்சேனை அல் - நஜா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு..

பைஷல் இஸ்மாயில் - 

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் நோக்கில் அட்டாளைச்சேனை அல் - நஜா விளையாட்டுக்கு கழகத்திடம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக மாபெரும் இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அல் - நஜா விளையாட்டுக்கு கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தெரிவித்தார்.

சமூக சேவைகளின் முன்னோடியாகத் திகழ்கின்ற அட்டாளைச்சேனை அல் - நஜா விளையாட்டுக் கழகம் மற்றும் அல் - நஜா சமூக சேவை அமைப்பு ஆகியன அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவுடன் இணைந்து இந்த மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றினை எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 தொடக்கம் மாலை 4.00 மணி வரை அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவில் அமைந்துள்ள அல் - நஜா விளையாட்டுக் கழக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இம்மாபெரும் இரத்ததான முகாமில் அனைத்து விளையாட்டுக் கழக வீரர்கள், பொது அமைப்புக்களின் உறுப்பிர்கள், சமூக சேவை மற்றும் தொண்டு நிறுவனங்களின் உறுப்பிர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பெறுமதியான உதிரத்தை தானமாக வழங்கி எம் சகோதரர்களின் உயிரைக் காக்க முன்வருமாறும்
அல் - நஜா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :