சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த மூவர் கைது...


பாறுக் ஷிஹான்-


ட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த மூவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு நிந்தவூர் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர் நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் விஜயவர்த்தன பொலிஸ் கன்டபிள்களான துரைசிங்கம் திலகரட்ன உள்ளிட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் இரவு சட்டவிரோதமாக ஹெரோயின் போதைபொருளை வைத்திருந்த நிந்தவூர் பகுதியில் வைத்து 26 மற்றும் 38 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அதே பகுதியில் 10 கிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த 30 வயது மதிக்கதக்க மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய விசேட தேடுதல் நடவடிக்கை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல்வேறு குற்றச்சாட்டிற்காக பிடிவிறாந்து பிறப்பிக்கட்டடிருந்த 24 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த தேடுதலில் கைதான அனைவரும் சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :