நெஞ்சை விட்டு நீங்கா நிறைவான நன்றிகள் எனது அன்பின் மட்டக்களப்பு வாழ் பொதுமக்களே!




டந்து முடிந்த 2020ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தலில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச்சின்னத்தில் இலக்கம்
இரண்டில் போட்டியிட்ட என்னை பெருமளவிலான விருப்பு வாக்குகளைத்
தந்து அமோக வெற்றியீட்டச் செய்தமைக்காக இதயபூர்வமான
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏறாவூர், கல்குடா, காத்தான்குடி பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான
முஸ்லிம் சகோதரர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப்
பிரதேசங்களிலும் பரவலாக வாழுகின்ற கிறிஸ்தவ, தமிழ்
சகோதரர்களும் தங்கள் அன்பின் அடையாளமாக விருப்பு வாக்கினைத்
தந்த எனது பெருவெற்றிக்குப் பங்களிப்பு செய்தமையானது நெஞ்சத்தில்
நீங்கா இடத்ததைப் பெற்றுள்ளது.

இவ்வெற்றியை உங்களதுவெற்றியாகவே கருதுகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்றப் பிரதிநிதி என்ற வகையில்
அனைத்துப் பிரதேசங்களுக்கும் என்னாலான சேவைகள் தொடரும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து மக்களும் அபிவிருத்திப்
பயணத்தில் ஒன்றாகக் கைகோர்ப்போம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :