கிழக்கு ஆளுனரின் பொது மக்கள் தின சந்திப்பு விரிவு


ஹஸ்பர் ஏ ஹலீம்-
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி கோதபய ராஜபக்சவின் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் நடத்தும் முதல் பொது நாள் இன்று (19) திருகோணமலை உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன் சிறப்பு என்னவென்றால், இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முதல் முறையாக மாகாண சபையின் அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அதிகாரிகள் அழைக்கப்பட்டார்கள்.

மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக ஆளுநர் செயலகத்தில் பொது நாட்களில் இந்த அதிகாரிகளை ஈடுபடுத்த ஆளுநர் முடிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி, ஆளுநர் பொது தினம் மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும். அதற்கும் மாகாண சபை அதிகாரிகளின் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் ஆளுநர் அலுவலகம் அமைந்துள்ளதால், மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்ட மக்கள் திருகோணமலைக்கு நீண்ட தூரம் பயணிப்பது கடினம் என்பதை கவனத்திற் கொள்ளப்பட்டு குறித்த பொது மக்கள் சந்திப்பு விரிவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :