அரசியலமைப்பு பேரவையின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது.
அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியலமைப்பு பேரவையின் செயலாளரும், நாடாளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்டுள்ள காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள் இதன்போது மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment