முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தனது 42 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தைப் பெறத் தவறிவிட்டார்.
2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்ததை அடுத்து விக்ரமசிங்க தனது இடத்தை இழந்துள்ளார்.
கடந்த 2015யில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 500,000 வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார்.
1978 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இடம்பெற்ற 8 நாடாளுமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையில் இந்த தோல்வி முதல் முறையாகும். ரணில் விக்ரமசிங்க 1994 முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால மற்றும் சர்ச்சைக்குரிய தலைவராக இருந்து வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment