சம்மாந்துறை பிரதேச சபையில் 38 வருடங்களாக அலுவலக உதவியாளராக கடமையாற்றிய ஏ.எல்.அலியாருக்கு பிரியாவிடை நிகழ்வு






எம்.எம்.ஜபீர்-

ம்மாந்துறை பிரதேச சபையில் 38 வருடங்களாக அலுவலக உதவியாளராக கடமையாற்றி ஓய்வுபெற்று செல்லும் ஏ.எல்.அலியாரிற்கான பிரியாவிடை வைபவமும் கௌரவிப்பும் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் பதில் தவிசாளர் ஏ.அச்சி முஹம்மட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், பிரதேச சபையின் நிதி உதவியாளர் ஏ.ஜே.எம்.ஜெஸீல் தொழில்நூட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், நூலகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓய்வு பெற்றுச் செல்லும் ஏ.எல்.அலியாருக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர் சார்பாக நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :