19வது திருத்தத்தை உடனடியாக நீக்க வேண்டும்- சரத் வீரசேகர

19
ஆவது திருத்தத்தை அவசியமான தருணத்தில் நீக்குவதற்கு பொதுஜனபெரமுன தயாராகவுள்ளது என கொழும்புமாவட்டத்தில் அதிகவாக்குகளை பெற்ற சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

19 வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் காரணமாக சுயாதீன நிலைமை ஏற்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஆணைக்குழுக்கள் அரசதுறை ஊழியர்களின் நடவடிக்கைகளை முடக்கும் நடவடிக்கையை மாத்திரம் செய்துள்ளன என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுக்களால் ஜனாதிபதியின் அதிகாரம் பறிபோயுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தின் மோசமான விளைவுகளை நாங்கள் இன்னமும் எதிர்கொள்கின்றோம்,இந்த திருத்தம் நாட்டின் பல துறைகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :