தேர்தலுக்கான திகதி தொடர்பில் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட கருத்து..

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடிய பின்னர், தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை கூறினார்.

மேலும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே தேர்தல் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறினார்.

இவேளை வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் விருப்பு இலக்கம் உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -