குளவித்தாக்குதலுக்கு இலக்காகி மற்றுமொரு பெண் மரணம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலைக்கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீது குளவிகள் தாக்குதல் மேற்கொண்டதில் ஒருபெண் மரணம் அடைந்துள்ளதாகவும் மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹாலிமா பிபி வயது 59 என அடையாளம் காணப்பட்டுள்ளார்
குறித்த தோட்டத்தில் முதலாம் இலக்க தேயிலைமலையில் கொழுந்தைப் பறித்துக்கொண்டு இருக்கையில் தேயிலைமரத்தின் அடியில் கட்டியிருந்த குளவிக்கூட்டில் கால் தட்டுப்பட்டு குளவிகள் கலைந்து சராமரியாக கொட்டியுள்ளன.
இவர்கள் கூச்சலிடுவதை கேட்ட ஆண்கள் குறித்த இடத்திற்கு சென்று தீமூட்டி குளவிகளை விரட்ட முயற்சித்துள்ளனர்.அதனைத்தொடர்ந்து குளவிக்கொட்டுக்கு ஆண்களும் இலக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இத்தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 5 பெண்களும் 3 ஆண்களும் அடங்குகின்றனர்.பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த பெண்ணின் பிரேதவுடல் மரணபரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.