மாற்று கட்சியினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு




ஹஸ்பர் ஏ ஹலீம்-
டை பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலினை முன்னிட்டு திருகோணமலையில் தேர்தல் கள நிலவரம் சூடு பிடித்து வருவதுடன் கட்சி மாறும் படலம் தொடங்கியிற்று. மாற்று கட்சியினரை சேர்ந்த பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள்.

குறித்த நிகழ்வு தம்பலகாமம்_சிராஜ் நகர் பகுதியில் இடம் பெற்றது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மஃறூப் முன்னிலையில் நேற்று (21)பலர் இணைந்து கொண்டார்கள். சஜீத் பிரேமதாச அணியினை பலப்படுத்தும் நோக்கில் கட்சி மாற்றங்கள் இடம் பெற்று வருவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது

.இதில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் ,தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான எச்.தாலிப் அலி ஹாஜியார்,ஆர்.எம்.றெஜீன்,கிண்ணியா நகர சபை உப தவிசாளர் ஐயூப் நளீம் சப்ரீன்,உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -