அரசாங்கம் அமெரிக்காவுக்கு விசுவாசமாகவே செயற்படுகிறது முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு


லங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்றார். அந்நாட்டின் எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதையையே நோக்காகக்கொண்டு செயற்படுகின்றார் என கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நேற்றைய தினம் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கடுமையான முறையில் கட்டுப்படுத்தியமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் -

யுத்த காலத்தில் இராணுவத்தை விட்டு விட்டு அமெரிக்காவுக்குச் சென்ற ஜனாதிபதி கோத்தபாய அவரது சகோதரன் ஜனாதிபதியானதும் நாடு திரும்பினார். நாட்டுக்கு வந்தது தனது ஜனாதிபதி சகோதரனுக்கு தெரியாமலேயே அமெரிக்காவுடன் மிலேனியம் செலஞ்சஸ் ஒப்பந்தத்தை இரகசியமாக செய்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மிலேனியம் செலஞ்சஸ் திட்டம் இலங்கைக்கு ஆபத்தானது அதனை இல்லாமல் செய்வேன் என கோத்தாவும் பொதுஜன பெரமுனவினரும் கூறி வந்தனர். ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் அவர்களின் பேச்சு மாறிவிட்டது. மில்லேனியம் செலஞ்சஸ் திட்டத்தில் பல நன்மைகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
அதேபோல நேற்றைய தினம் முன்னிலை சேசலிச கட்சியினால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் நீதிமன்ற தடையுத்தரவென்றை அரசாங்கம் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் தடையையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவில் கருப்பின பிரஜையொருவரை அந்நாட்டு பொலிஸாரால் கொள்ளப்பட்டமையை எதிர்த்தே கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆக அநீதிக்கெதிராக குரல் எழுப்புவதற்கு இலங்கையில் அனுமதி மறுக்கப்படுகின்றமை தெளிவாகிறது. அத்தோடு அமெரிக்காவின் அராஜகங்களுக்கு இந்த அரசாங்கம் ஆதரவளிப்பதையும் ஒத்துழைப்பு வழங்குவதையும் காண்கிறோம். இது இலங்கையின் எதிர்காலத்திற்கு மிக மோசமான செய்தியை சொல்கிறது.
முன்னர் ஐக்கிய தேசியக் கட்சிதான் அமெரிக்க ஆதரவு போக்கை கடைபிடிப்பதாக குற்றச்சாட்டுகளை ராஜபக்ஷாக்களும் அவர்கள் சார்ந்தோர்களும் தெரிவித்து வந்தனர். இன்று அவர்களும் அமெரிக்க சார்பானவர்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கின்றர்.
அமெரிக்காவில் கருப்பின பிரஜையொருவருக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட அராஜகம் கண்டிக்கத்தக்கவை அதேபோன்று இந்நாட்டிலும் அராஜகத்துக்கு எதிராக குரல் எழுப்பியவர்களை பொலிஸார் மிக மோசமாக நடத்தியதையும் கண்டிக்கிறோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -