பாலாம்பிகா சமேத பாலீஸ்வர வைத்தியனாத ஆலய கும்பாபிசேகம்.!


காரைதீவு சகா-
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வர வைத்தியனாத சுவாமி தேவஸ்தான கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு நேற்று (09.06.2020) எண்ணைக்காப்பு சாத்துகின்ற நிகழ்வு யாக பூஜைகள் சநிதம் சிறப்பாக நடைபெற்றது.
நிக ழ்வில் 12 ருத்ர ஜெபம் மற்றும் மரகத லிங்கத்திற்க்கு அபிசேகம் இடம்பெற்றது.

இதில் இலங்கை சித்தர்கள் குரல் ஐயா சித்த வித்தியார்த்தி வேதிக் பண்டித் ஸ்ரீல ஸ்ரீ சிவசங்கர் குருஜி அவர்களின் அழைப்பில் காரைதீவு சர்வேஸ்வரா பஜனைக்குழுவினர் கலந்துகொண்டு பஜனை நிகழ்த்தினர்.

சர்வேஸ்வரா பஜனைக்குழுவின் தலைவர் வைத்தியர் மார்க்கண்டு ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் பஜனைபாடியதற்காக ஆலயசந்நிதானத்தில் பொன்னாடைபோர்த்தப்பட்டுக்கௌரவிக்கப்பட்டனர்.

தேவஸ்தானத்தின் மகா கும்பாபிசேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -