பழுதடைந்த திராட்சை பழங்கள் மீட்பு


பாறுக் ஷிஹான்-
னித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் பங்கஸ் படர்ந்த திராட்சை பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை(24)முற்பகல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு சந்தி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த திராட்சை பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்போது பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தலைமையில் சென்ற பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் பெருந்தொகைையான பழுதடைந்த திராட்சை பழங்கள் மீட்டுள்ளதுடன் காரைதீவு பிரதேச சபையின் உதவியுடன் அவை அழிக்கப்பட்டன.
மேலும் இந்நடவடிக்கையை முன்னெடுத்த சுகாதார அதிகாரிகள் குறித்த
அழுகிய திராட்சை பழங்களை விற்பனை செய்த விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டதோடு பாவனைக்குதவாத பழங்களை காரைதீவு பிரதேச சபையின் திண்ம கழிவு அகற்றும் பிரிவினரின் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -