வெள்ளை மாளிகையை விட்டோடிய டொனால்ட் ட்ரம்...

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

வெள்ளை மாளிகையை விட்டோடிய டொனால்ட் ட்ரம்.
நாடு, தேசம், மக்கள் என்று பாராது மனிதாபிமானத்தினை குழி தோண்டீப் புதைத்து விட்டு அப்பாவிகளைக் கொன்று குவித்து வரும் நாடு அமெரிக்காவாகும். 

பல நாடுகளில் இரத்தக்கறை படிய வைத்து சுடுகாடாக ஆக்கிய வரலாறுகளைப்படைத்து மகிழ்சியடைந்ததன் விளைவு இன்று கொரோனாவுக்கு மேலாக தனது நாட்டிலேயே அப்பாவி கறுப்பின மக்களை ஈவிரக்கமின்றி நடு வீதியில் வைத்து கொலை செய்யும் கைங்கரியத்திற்கு இறைவன் கொடுத்த தண்டனை டொனால்ட் ட்ரம் வெள்ளை மாளிகையைவிட்டே ஓடும் அளவிற்கு இறைவன் ஆக்கி விட்டான்.
“”அரசன் அற்றறுப்பான் தெய்வம் நின்றறுக்குமாம்””
பலஸ்தீன், ஹாஸா, சிரியா, உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவாலும், இஸ்ரேலாலும் ஈவிவரக்கமற்ற வகையில் கொன்று குவிக்கப்பட்ட முஸ்லிம்களின் கண்ணீரினதும், கதறல்களினதும் வினையும், விளைவும் இன்று மகிழ்சியில் குதூகளித்த அமெரிக்காவுக்கு பரிசாக கிடைத்துள்ளது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுக்கு ஒப்பாக இன்று அமெரிக்க நகரங்கள் சுடுகாடாக ஆகிவருக்கின்றது. கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் அமைதி இல்லை, நிம்மதி இல்லை என்ற நிலை நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது அமெரிக்க இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக் காரர்களிடம் காலில் விழுந்து மண்டியிட்டுக் கொண்டு கலவரத்தை நிறுத்தச் சொல்லும் காட்சி வரலாற்றில் அமெரிக்காவில் கணவிலும் இடம்பெற்றிராத ஒரு காட்சியாகும். நான் என்ற ஆனவம் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கொடுக்கப்பட்டு வரும் சாட்டையடியாகும்.

அல்லாஹ் யாருக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்பதில் வல்லவன். இந்த வகையில் அல்லாஹ் தனது சொந்த நாட்டு மக்களாலேயே ட்ரம்பின் முகத்தில் கரியைப் பூச வைத்துள்ளான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -