தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!

ந்தியாதெற்கு அசாமில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறைந்தது 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தெற்கு அசாமின் பாரக் பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டது. காச்சார் மாவட்டத்தில் 7 பேரும், ஹைலாக்கண்டி மாவட்டத்தில் 7 பேரும், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 இதுதவிர இந்த மாவட்டங்களில் பலர் நிலச்சரிவால் படுகாயமடைந்துள்ளதாகவும், பலரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த 2 நாட்களாக பாரக் பள்ளத்தாக்கில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்தவுடன், மீட்பு படையினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -