ஜே.எப்.காமிலா பேகம்-
குருநாகல், கலேவெல அலுத்வெவ பிரதேசத்தில் செல்லப்பிரணிகளாக வளர்க்கப்பட்ட 12 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள விவசாயி ஒருவரால் இந்த கொடூர காரியம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
முன்பு இவ்வாறு கோழி, நாய் போன்ற விலங்குகளும் குறித்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், விஷம் வைக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் குறித்து கலேவெல பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.