நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
பெண்ணின் உயிரை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு தலவாகலை பிரதேச இளைஞர்கள் 22/05 பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்
21 திகதி தற்கொலை செய்துகொள்ள கொத்மலை ஆற்றில் குதித்த பெண்ணை தலவாகலை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ருவான் பெர்னாந்து அவரோடு பொலிஸ் கான்ஸ்டபல் ரூபன் ஆகியோர் விரைந்து செயற்பட்டு காப்பாற்றினர்
உயிருக்கு போராட்டிய குறித்த பெண்ணை காப்பாற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நீரில் குதித்து போராடினார் இந் நிலையில் இருவரும் நீர்தேக்கத்தில் தத்தளித்த போது பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி தலைமையிலானோர் ஆற்றில் குதித்து இருவரையும் மீட்க முற்பட்ட போது தெய்வாதீமாக பெண் மாத்திரமே உயிரோடு மீட்கப்பட்டதுடன் பல மணித்தியால போராட்டத்தின் பின் மற்றவர் சடலமாக மீட்கப்பட்டார் இந் நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகளை பிரதேச இளைஞர்களினால் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்