பொலிஸாருக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவித்த இளைஞர்கள்




நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-

பெண்ணின் உயிரை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு தலவாகலை பிரதேச இளைஞர்கள் 22/05 பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்

21 திகதி தற்கொலை செய்துகொள்ள கொத்மலை ஆற்றில் குதித்த பெண்ணை தலவாகலை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ருவான் பெர்னாந்து அவரோடு பொலிஸ் கான்ஸ்டபல் ரூபன் ஆகியோர் விரைந்து செயற்பட்டு காப்பாற்றினர்

உயிருக்கு போராட்டிய குறித்த பெண்ணை காப்பாற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நீரில் குதித்து போராடினார் இந் நிலையில் இருவரும் நீர்தேக்கத்தில் தத்தளித்த போது பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி தலைமையிலானோர் ஆற்றில் குதித்து இருவரையும் மீட்க முற்பட்ட போது தெய்வாதீமாக பெண் மாத்திரமே உயிரோடு மீட்கப்பட்டதுடன் பல மணித்தியால போராட்டத்தின் பின் மற்றவர் சடலமாக மீட்கப்பட்டார் இந் நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகளை பிரதேச இளைஞர்களினால் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -