சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு கொரோனா தடுப்புக்கான ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்-

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத் தொகுதியொன்று சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்துத் தொகுதி யாவும் வெள்ளிக்கிழமை(22) சவளக்கடை பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.அஷ்ரபிடம் கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத மருத்துவ இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் குழுவினர் வழங்கி வைத்தனர்.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணனின் பணிப்புரைக்கமைய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் ஆயுர்வேத நோய் சக்தியை அதிகரிக்கவும் இம்மருந்துகள் சவளக்கடை பொலிஸாருக்கு வழங்கவென கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத மருத்துவ இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் கருத்துத் தெரிவிக்கையில்

கொரோனா தொற்று சந்தேக நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருபோருக்கே முதலில் இம்மருந்து வழங்கபட்டது. தற்போது கொரோனா தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்களினதும் பொலிஸ் மற்றும் முப்படையினரதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களது பாவனைக்காக இம்மருந்து விநியோகிக்கப்படுகிறது.

14 மூலிகைகள் அடங்கிய மிகப்பெறுமதியான இந்த ஆயுர்வேத மருந்தானது பக்கவிளைவுகள் அற்றதும் பயன்மிக்கதுமாகும். இது எமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் செயலிக்கச் செய்து விடக்கூடிய வல்லமையை கொண்டிருக்கிறது. பொதுவாக உடம்புக்கு நல்ல மருந்தாகும். கடந்த இரண்டு மாதங்களாக நானும் இம்மருந்தை பாவித்து வருகின்றேன் என்று குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -