திருமலை ஊடகவியலாளர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு


ஹஸ்பர் ஏ ஹலீம்-


திருமலை ஊடகவியலாளர்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. கிண்ணியாவில் இயங்கும் ஹஸன் மௌலவி பவுன்டேசன் ஊடாக இன்று (01) கிண்ணியா ஹஸனாத் சிறுவர் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டன. இதில் மூவின ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் பிராந்திய ஊடகவியலாளர்களாக செயற்பட்டு வரும் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர்களுக்காக அஸீஸா பவுண்டேசன் ஹெல்பன் ஜேர்மனி ஆகியன இணைந்து ஹஸன் மௌலவி நற்பணி மன்றம் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

கொவிட்19 கொரோனா அசாதாரண சூழ் நிலையின் காரணமாக இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதுடன் இதில் அரசி,மா போன்ற அத்தியவசிய பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் இருபதாயிரம் குடும்பங்களுக்கு இது வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொருட்களை ஹஸன் மௌலவி நற்பணிமன்றத்தின் பணிப்பாளர் தாரிக் ஹஸன் அவர்கள் வழங்கி வைத்தார்.

இதில் ஹஸன் மௌலவி நற்பணி மன்ற இணைப்பாளர் ஹமீட் மௌலவி,மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்க தலைவர் ஒலுமுதின் கியாஸ் ஷாபி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -