இலங்கை செஞ்சிலுவை சங்க அம்பாறை கிளை உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு



பாறுக் ஷிஹான்-
லங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளையினூடாக உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கட்டார் செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையில் கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலும் உள்ள வறிய மக்களுக்கான சுமார் 7 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு நிவாரண பொருட்கள் சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (30) காலை வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளை தலைவர் சுனில் திஸ்ஸாநாயக்க, சவளக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.அஷ்ரப் , செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளை நிருவாக உத்தியோகத்தர் சந்திரிக்கா அபேரத்ன , செஞ்சிலுவை சங்கத்தின் ஊழியர்கள் ,பொலிஸார் , பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.


--
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -