கலாநிதி ஷுக்ரி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும், ஜாமியா நளீமியா கலாபீடத்தின் வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றிய இவர் இக்ரா தொழிநுட்ப கல்லூரியை ஸ்தாபித்து இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டியாக பெரும் பங்காற்றினார்.
மார்க்க கல்வியூடாக இலங்கையில் ஒரு பண்பட்ட முஸ்லீம் சமூகத்தினை கட்டியெழுப்ப இவர் ஆற்றிய தொண்டு யாராலும் மறக்க முடியாத மிகப்பெரும் சேவையாகும். பல்லின சமூகத்தின் மத்தியில் முஸ்லீம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டலை மிகவும் துல்லியமாக வழங்கியவர் கலாநிதி ஷுக்ரி அவர்கள். அன்னாரின் கல்விச் சேவையினை வல்ல இறைவன் பொருந்திக்கொண்டு அவரது மறுமை வாழ்வு சிறக்க இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்
மயோன் முஸ்தபா
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர்