கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள சோலை வெட்டுவான் பகுதியில் கடலில் காணாமல் போன இளைஞர் நேற்று இரவு கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நேற்று நள்ளிரவு நல்லடக்கம் செய்யப் பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா-03 மதீனா நகர் பகுதியைச் சேர்ந்த யுனைதீன் - பாஹீம் (வயது -21) இளைஞராவர்.
கிண்ணியா- சோலை வெட்டுவான் பகுதியில் மூவர் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது அவ் வழியாக இருவர் மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
குறித்த இருவரும் பொலிஸார் என நினைத்து, இவ் இளைஞன் கடல் வழியாக தப்பிக்க முயன்ற போது இவர் காணாமல் போயிருந்தார்.
இவரது சடலம் இக் கடலில் சேற்றில் புதையுண்ட நிலையிலையே மீட்கப்பட்டதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.