கொரோனா பரவலை தடுக்க சமூக தொலைவை கடைபிடிக்கும் மக்கள்: நோய்க்கிருமிகள் பரவாமல் தடுக்க மிகவும் அவசியமானது!


தொற்று நோய் பரவாமல் தடுக்க, பின்பற்றப்படும் சமூக பழக்க வழிமுறையே சமூகத் தொலைவு எனக் குறிப்பிடப்படுகிறது. சமூக சூழலில், விலகி நிற்பது என இதை புரிந்து கொள்ளலாம். நோய்க்கிருமிகள் மேலும் பரவாமல் தடுக்க இது அவசியமாகிறது. பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, கூட்டங்களை தவிர்ப்பது ஆகியவை இதில் அடங்கும். குறிப்பாக அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத சூழல் தவிர மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருப்பது நல்லது. வெளியே சென்றாலும், மற்றவர்களிடம் இருந்து போதுமான தொலைவு (ஒரு மீட்டர்) தள்ளியிருக்க வேண்டும். கைக்குலுக்குவது போன்ற செயல்களையும் தவிர்க்க வேண்டும். நோய்க்கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்பைக் குறைத்து, அதன் தீவிரத்தை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது இந்த வழிமுறையை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -