மருதமுனையில் 3200 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு

ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ருதமுனை ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்து பள்ளிகளிவாசல்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரன சூழல் காரணமாக நாளாந்த தொழிலை இழந்துள்ள 3200 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04.04.2020) மருதமுனை அனர்த்த நிவாரண மத்திய நிலையமாக செயற்படும் மஸ்ஜிதுல் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
ஜம்யியதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ.ஹூசைனுத்தீன் (றியாழி) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்,சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்வின், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த , கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன ஆகியோருடன் மருதமுனையின் அணைத்து பல்லவாசல்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
பள்ளிவாசல்கள் நிருவாகத்தினர் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளிற்கு நேரடியாக சென்று இந்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -