தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி செயலாளர் பி.பீ . ஜயசுந்தரவுக்கு எழுதிய கடிதத்தில் இது கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், . புதிய பாராளுமன்றக் கூட்டத்திற்கான புதிய திகதியை வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்.
அரசியலமைப்பின் விதிகளின்படி, அந்த திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட திகதிக்கு மூன்று மாதங்களுக்குள் இருக்க வேண்டும். இதன்படி ஜுன் மாதம் 1ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும். அப்படியானால் தேர்தல் மே 27 அல்லது 28 அன்று நடத்தப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடு பணிகள் இந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட வேண்டும்.
தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தவரை, அந்த நாட்களில் தேர்தல்களை நடத்துவதில் உள்ள சிரமத்தை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.