தனது சகோதரை விடுவிக்க வேண்டும்? பஸிலிடம், ரிசாட் பதியூதின் கோரிக்கை!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

யிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனது சகோதரர் ரியாத் பதியுதீனை விடுவிக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக ஆங்கில செய்தித்தாளொன்று இதனை தெரிவித்துள்ளது

எனினும் உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கியின் பினை முறிவிற்பனை போன்ற விசாரணைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருவதால் அதில் தலையிடமுடியாது என்று பசில் ராஜபக்ச கூறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரியாத் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரியுடன் தாக்குதலுக்கு முன்னர் தொலைபேசியில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு வெகு நாட்களுக்கு முன்னர் இந்த தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றதா? அல்லது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முதல் நாள் அளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதா? என்பது தெரியவரவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -