தற்போது நாட்டில் தேர்தலொன்றை நடத்த முடியாத நிலை உள்ளது - JVPஅனுரகுமார

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

ற்போது நாட்டில் தேர்தலொன்றை நடத்தமுடியாத நிலை உள்ளமையை சுட்டிக்காட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்திக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று வேட்புமனுவில் கைச்சாத்திட்டப் பின்னர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தேர்தலொன்று நடத்தப்பட வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

எனினும் நடப்பில் இதனை உறுதிப்படுத்த முடியாது. கொரோனா வைரஸ் தொற்று ஆபத்திருப்பதால் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்யமுடியாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

எனவே தமது கட்சி தேர்தல் பிரச்சாரங்களை இடைநிறுத்த முடிவெடுத்துள்ளதென்று JVPயின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். ஏனைய கட்சிகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். எனினும் எம்மைப் போன்ற இடதுசாரி கட்சிகள் பெருமளவு பணத்தை செலவிடமுடியாமல் பெரும்பாலும் வீடு வீடாக சென்றே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றன.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெளிவுப்படுத்தவுள்ளதாக JVPயின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -