பஸ்களில் ஏற்றிச்செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கையை வரையறுப்பது தொடர்பில், இலங்கை போக்குவரத்துச் சபை அவதானம் செலுத்தியுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய, பஸ்களில் காணப்படும் ஆசனங்களுக்கு மேலதிகமாக குறைந்த அளவிலான பயணிகளை மாத்திரமே ஏற்றிச்செல்ல முடியும்.
இதன் காரணமாக, மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளர் ஏ. எச். பண்டுக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனைத்து சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் முகக் கவசங்களைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், இலங்கை போக்குவரத்துச் சபை இந்தத் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
