வலி கிழக்கில் உணவின்றி எவராவது இருப்பார்களாயின் சனசமூக நிலையங்கள் தமது வைப்பில் இருந்து உதவ சிபாரிசு - தவிசாளர் நிரோஷ்


லிகாமம் கிழக்கிற்கு உட்பட்ட பகுதியில் நாளாந்தம் வருமானம் பெற்று வாழ்வோர் எவராவது தற்போதைய சுPழலில் பட்டினி நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் இருப்பின் பிரதேச சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு தமது சேமிப்பில் உள்ள நிதியில் உடனடி நிவாரண உதவியினை வழங்க சிபாரிசு செய்வதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் கிழக்கிற்கு பிரதேசம் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களை அதிகமாகக் கொண்ட பிரதேசம் ஆகும். நாளாந்த உழைப்பாளர்களை அதிகமாகக் கொண்ட கிராமங்கள் எமது பிரிவிற்குள் காணப்படுகின்றன. இந் நிலையில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையினால் எவராவது வீட்டில் உணவின்றி இருக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருக்கின்றது. இந் நிலையில் ஓர் குடும்பமோ நபரோ பட்டினி இருப்பார்கள் ஆயின் அது பற்றி அப் பிரதேச சனசமூக நிலையங்களுக்கே ஊரடங்கு நிலையில் முதலில் உண்மையினை அறியமுடியும்.

அவ்வாறு ஏற்படின் சனசமூக நிலையங்கள் தமது வைப்பில் உள்ள பணத்தில் அரசின் உரிய நிவாரண விநியோகம் கிடைப்பதற்கிடையில் தேவை ஏற்பட்டால் உடனடி நிவாரண உதவியினை நல்க முடியும் அதனை அனர்த்த சுழ்நிலையாக நாம் சிபாரிசு செய்கின்றோம்.

வலிகாமம் கிழக்கில் 125 வரையான சனசமூக நிலையங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சனசமூக நிலையங்கள் கடந்த காலத்தில் அரச அபிவிருத்தித் திட்டத்தில் ஒப்பந்தங்களைச் செய்து தமது சேமிப்பு கணக்கில் வைப்பினைக் கொண்டுள்ளன. அடிப்படையில் சனசமூக நிலையங்கள் பிரதேச சபையின் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் தமது செலவீனம் பற்றிய உறுப்படுத்தலுடனேயே வங்கியில் இருந்து பணத்தினைப் பெறமுடியும். ஊரடங்கு நிலையில் சனசமூக நிலைய உத்தியோகத்தர் ப. உதயசீலன் அவர்களை தொலைபேசியில் 0776597225 தொடர்பு கொண்டு உரிய ஒழுங்குபடுத்தல்களை அறிந்து அவரின் முனைப்பான ஒத்துழைப்பினைப் பெற்று குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்த முடியும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -