சாய்ந்தமருதில் மணல் கடத்தல் முறியடிப்பு-மோட்டார் சைக்கிளும் மீட்பு




பாறுக் ஷிஹான்-
ட்டவிரோதமாக உரப்பை மூலம் கடல்மண் கடத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றினை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமை திணைக்களம் உத்தியோகத்தர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையான கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக அண்மைக்காலமாக மண்கடத்தல் இடம்பெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து இரவு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமை திணைக்கள உத்தியோகத்தர் குழு சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது இரவு மோட்டார் சைக்கிள் மூலம் சட்டவிரோதமாக மண் கடத்தல் முயற்சி ஒன்றினை தடுத்து நிறுத்தியதுடன் கடத்தலை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற மோட்டார் சைக்கிளை கைப்பற்றியதுடன் சுமார் 20க்கும் அதிகமான மண் மூடைகள் கைப்பற்றப்பட்டு மீண்டும் கடற்கரையில் கொட்டப்பட்டன.

மேலும் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தப்பி சென்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -