மு.கா தலைவர் ஹக்கீமை தேசிய தலைவராக்கிய இடத்தில் தே.கா தலைவர் அதாஉல்லாவை ஊர் கூடி தேசிய தலைவனாக்கியது சாய்ந்தமருது !!

நூருல் ஹுதா உமர்-சாய்ந்தமருது – மாளிகைக்காடு மக்கள் பணிமனை ஏற்பாட்டில் "தேசிய அரசியலில் அம்பாறை மாவட்ட எதிர்கால அரசியல் புரட்சி தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம்" எனும் தொனிப்பொருளில் நேற்று (08) இரவு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சாய்ந்தமருத்துக்கு நகரசபை எனும் கனவை நனவாக்க உதவிசெய்வோரை தோளில் சுமப்போம் என சாய்ந்தமருதினால் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இணங்க அண்மையில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களின் முயற்சியினால் சாய்ந்தமருத்துக்கான நகரசபை வர்த்தகமாணி அறிவித்தல் வெளியாகியிருந்தது. (பின்னர் அது தற்காலியமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.) அதற்கான நன்றிக்கடனாக நேற்று இரவு மாளிகைக்காடு ஸைத் பின்த் தாபித் பள்ளிவாசல் முன்றலில் ஆரம்பித்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் வரை வாகன பவனியாகவும் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களையும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களையும் தோளில் சுமந்தும் வந்து இளைஞர்களும் ஊர் மக்களும் மேடையேற்றினர்.

இந்த கூட்டத்தில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களை முஸ்லிங்களின் தேசிய தலைவராக அறிவித்தார். இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அசீம், ஏ.ஆர்.ஏ .அஸீஸ், தோடம்பழ அணியின் தலைவர் எம்.எச்.எம்.நௌபர் ஹாஜி, உலமா சபை சார்பிலான உலமா, பலநோக்கு கூட்டுறவு சங்க பிரதிநிதியாக உதுமாலெப்பை (நீ.அ.), தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளரும்,மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளருமான நூருல் ஹுதா, தேசிய காங்கிரஸின் மூத்த போராளியும் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினருமான ஹிபத்துள் கரீம், சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் நகரசபை பெற மக்கள் பட்ட இன்னல்கள் பற்றி எடுத்துரைத்தனர் .

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் டொக்டர்.ஏ.உதுமாலெப்பை, தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம். ஷியா, தொழில் சங்க செயலாளர் ஏ.சி.எம்.நிஸார்,கொள்கை அமுலாக்கள் செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் உட்பட பிரதிநிதிகள், உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் அப்துல் மஜீட், சாய்ந்தமருது - மாளிகைக்காடு மக்கள் பணிமனையினால் ஐந்து அம்சங்கள் அடங்கிய பிரகடனத்தை வாசித்து வெளியிட்டு வைத்தார். இப்பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் நடைபெற்ற இதே இடத்தில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவராகவும், இலங்கை வாழ் முஸ்லிங்களின் தேசிய தலைவராகவும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிட்டதக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -