சீனாவிடம் இன்னும் பில்லியன் கணக்கான ரூபாவை கடனாக பெற இன்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.
இதனடிப்படையில், சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து $1 Billionயையும் ( சுமார் 18 ஆயிரம் கோடி ரூபா ) , 2 Billion யுவானையும் ( சுமார் 5,000 கோடி ரூபா ) கடனாக பெற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
குறிப்பாக கடன் தவணையை செலுத்தவும் அரசாங்கத்தின் மூலதன செலவுகளை ஈடு செய்ய இந்த கடனை பெற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இந்த கடன் 3 வருட நிவாரண காலத்தின் பின் 10 வருடங்களுக்குள் செலுத்தி முடியும் அடிப்படையில் பெற்றுக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.