இருவேறு வனப்பாதுகாப்பு பிரிவில் தீ வைப்பு 50 இற்கு மேற்பட்ட ஏக்கர்கள் தீயினால் எரிந்து நாசம்.;



ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாஞ்சமலை வனப்பாதுகாப்பு நேற்று (01) பகல்; வைக்கப்பட்ட தீ காரணமாக அந்த வனப்குதியில் சுமார் 30 இற்கும் மேற்பட்ட வனபகுதி தீக்கிரையாகின.
கடும் வரட்சி மற்றும் காற்று காரணமாக தீ மிக வேகமாக பரிவின இதனால் தீயினை கட்டுப்படுத்த முடியா சூழ்நிலையில் இறுதியில் இலங்கை வான்படையின் ஹெலிகொப்டர்கள் மூலம் தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
இதே வேளை நேற்று மாலை மற்றும் இரவு வேளையில் காசல்ரி நீர்தேக்க வனப்பாதுகாப்பு பரிவில் இனந்தெரியாதவர்கள் வைத்த தீ காரணமாக அப்பகுதியில் சுமார் 15 ஏக்கருக்கும் மேல் எரிந்து நாசமாகியுள்ளன.
தீயினை கட்டுப்படுத்த இரானுவம் மற்றும் மஸ்கெலியா பொலிஸார் ஈடுபட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இனந் தெரியாத ஒருவரால் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
மலையகப்பகுதியில் நிலவி வரும் வரட்சியான காலை நிலையினையடுத்து காடுகளுக்கு தீ வைக்கம் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 10 மேற்பட்ட காடுகளில் தீ வைப்பு சம்பவங்கள் இடம்பெற்றள்ளன.
குறித்த தீ காரணமாக நூற்றுக்ககணக்கான வனப்பிரதேசம் எரிந்து நாசமாகியுள்ளதுடன் எமது நாட்டு:க்கே உரித்தான அரிய வகை விலங்கினங்கள் மனிதனுக்கு நன்மையும் பூச்சுக்கள்,புழுக்கள்,நீரூற்றுகள்,அரியவகை தாவரங்கள்;,மூலிகைகள் உட்பட வளமிக்க காட்டு வளம் அழிந்து போய்வுள்ளன.
இனந்தெரியாக விசமிகள் காடுகளுக்கு தீ வைப்பதன் காரணமாக எதிர்க்காலத்தில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதுடன் தேசிய மின்சார உற்பத்தியும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளன.
எனவே இது குறித்து பாதுகாப்பு பிரிவினர் கூடிய கவனம் செலுத்தி தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியுமென பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதே நேரம் காடுகளுக்கு அருகாமையில் வாழும் பொது மக்களை சூழல் தொடர்பாக மக்களுக்கு பாரிய அளவில் தெளிவூட்டல்கள் மேற்கொள்வதன் மூலம் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்கலாம் என்பது புத்திஜீவிகளின் கருத்தாகும்.
காடுகளுக்கு தீ வைப்பதன் காரணமாக காட்டுப்பகுதியில் வாழும் கொடிய மிருகங்கள் பாம்புகள் போன்றன தங்களுடைய வாழ்விடங்களை மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அண்மித்த பகுதியில் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுவதனால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்க முகம் கொடுக்க நேரிடலாம் எனவும் இவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -