காரைதீவில் இளைஞர்அணிதேர்தலில் அஜித்குமார் தெரிவு!


காரைதீவு நிருபர் சகா-
காரைதீவுப் பிரதேசஇளைஞர்பாராளுமன்ற உறுப்பினராக செல்வன் சி.அஜித்குமார் 335வாக்குகளைப்பெற்றுத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தேசிய இளைஞர் பாராளுமன்றத்திற்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து நேற்றைய தேர்தலூடாக இளைஞர்கள்தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
காரைதீவுப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இளைஞர்கழகங்களுக்கிடையிலானஇளைஞரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரதேசசெயலகத்தில் நேற்று நடைபெற்றது.
போட்டியிட்ட சி.அஜித்குமார் 335வாக்குகளையும் எ.எம்.நிஜாத் 188 வாக்குகளையும் ம.சிந்துஜன் 26வாக்குகளையும் பெற்றனர்.

அதன்படி சி.அஜித்குமார் காரைதீவு பிரதேசசெயலகம்சார்பில் தெரிவானார்.
பிரபலமான வேகப்பந்து வீச்சாளரான சி.அஜித்குமார் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் முக்கியபந்துவீச்சாளராவார்.

கடந்தவருடம் நடைபெற்ற எயார்ரெல் வேகப்பந்துவீச்சுப்போட்டியில்தேசியமட்டத்தில் தெரிவானவர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -