கிழக்கில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை துறை சார் டிப்ளோமக்களுக்கு முன்னுரிமையளித்து நியமனங்களை வழங்குங்கள்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
மூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள போதும் பல வருட காலமாக நிலவி வருகின்றமையினாலும் அதனை உடன் நிரப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்கான கல்வித் தகைமைகளாக சமூகப் பணி டிப்ளோமாதாரிகள்,சமூகப் பணி பட்டதாரிகளை விசேடமாக உள்ளீர்க்க வேண்டும் என கிழக்கு மாகாண ஐக்கிய தொழில்வாண்மையான சமூகப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் தில்லையம்பலம் ஹரிஸ்ரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று (18) தம்பலகாமத்தில் உள்ள குறித்த சங்கத்தின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு தெரிவிக்கையில் இலங்கையில் ஒரேயொரு சமூகப் பணி கல்லூரியாக சமூக சேவை அமைச்சின் கீழ் உள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம் காணப்படுகிறது தொழில்வாண்மையிலான இரு வருட முழு நேர சமூகப் பணி டிப்ளோமா,நான்கு வருட சமூகப் பணி பட்டம் என்பன காணப்படுகிறது இது கடந்த காலங்களில் இருந்து சமூக சேவை உத்தியோகத்தர் நியமனம் மற்மும் சக நியமனங்களின் போது துறை சார்ந்த பட்டப்படிப்புகளில் புறக்கணிக்கப்பட்டே வருகிறது இதற்காக கிழக்கில் தற்போது சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான 15 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுவதை அறியமுடிகிறது
இதற்கான விண்ணப்பத்தை விரைவில் கோருவதுடன் சமூகப் பணி டிப்ளோமாதாரிகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும் .

ஆசிரியர் சேவை தொடர்பில் பட்டமுடித்தவர்களுக்கும் விவசாய சேவை தொடர்பில் டிப்ளோமாதாரிகளுக்கும் உரிய துறையில் நியமனங்கள் வழங்கப்படுவது போன்று சமூகப் பணி டிப்ளோமாதாரிகளான எங்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்கப்படுவதில்லை இது எமக்கு கவலையை ஏற்படுத்துகிறது .
தற்போதைய ஜனாதிபதி அதிமேதகு கோத்தபாய அவர்கள் சிறந்த முற்போக்கு சிந்தனையுள்ளவர்,துனிச்சலான கொள்கைகளை பிரகடனப்படுத்தி வருகிறார் இதனை பாராட்டுகிறோம் இந்த மனுவை கிழக்கு ஆளுனர்,ஜராதிபதி போன்றெர்களுக்கு அனுப்பியுள்ளோம்.

இதனை கருத்திற்கொண்டு புதிய சுற்று நிரூபத்துக்கு ஏற்றவாறு எமக்கான உரிய துறையில் உரிய நியமனங்களை முக்கியத்துவம் அளித்து வழங்க வேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுப்பதாக மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -