கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றை வீடியோ செய்த பாக்கிஸ்தானிய தொடர்பில் -ஐ.தே.கட்சி கேள்வி

நீர்கொழும்பிலுள்ள கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றை வீடியோ செய்து கொண்டு நாட்டிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளே இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு காரணம் எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கு இந்த விடயம் தெரியும் என குறிப்பிட்ட அவர், இதற்குப் பின்னர் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என நினைக்கிறேன் என்றும் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முழுப் பொறுப்பு கூறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுஜன முன்னணியுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் இனியும் சுயாதீனமாக நடக்குமா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -