ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் வேலையற்ற இளைஞர்கள் யுவதிகளுகளுக்கு அரச தொழில்வாய்ப்புக்களை வழங்க பாரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இவ் வேலைத்திட்டத்தினை சில மோசடிக்காரர்கள் தமது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பிழையாக வழிநடத்தி வேலைபெற்றுத் தருவதாக பணம் பறிக்கும் ஏமாற்று வேலைகளை செய்து வருவதாக அறியக் கிடைத்துள்ளது.
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இவர்கள் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள்,ஜனாதிபதியின் இணைப்பாளர்கள்,கட்சி அமைப்பாளர்கள் எனும் தோரணையில் இவ் வேலைகளை செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனை எமது அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளதோடு இவ்வாறானவர்களை எமக்கு அறியத் தருமாறும் கேட்டுக் கொள்கின்றது.
கடந்த அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்ட இளைஞர்,யுவதிகளுகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை இந்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் இவ்வேளையில் படித்த தகுதியுள்ளவர்கள் பயனடையவுள்ள இவ்வேளையில் தயவு செய்து இவ்வாறான மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -