வளை குடாவில் போர் பதற்றம்! மூன்றாம் உலகப் போரை நோக்கிய நகர்வு !

எம்.எம்.நிலாமுடீன்-

ரானிய படை தளபதிகளை அமெரிக்கா ஏவுகனை வீசி கொன்றதால் ஈரான் அனைத்து அணு ஏவுகனைகளையும் சவுதி உட்பட எதிரி நாடுகளை நோக்கி நிலை நிறுத்தும் பணியை தொடங்க ஆணையிட்டது.


மிக பெரும் அழிவை இஸ்லாமிய நாடுகள் சந்திக்கும்!

ஈராக்கில் தளபதி காசிம் சுலைமானி முன்னெடுத்த சிறப்பான பணிகளை புதிய தளபதி தொடர்ந்து முன்னெடுப்பார் என நம்புவதாக ஈரான் அரச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய தளபதி

ஈரானின் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவரது இடத்துக்கு பிரிகேடியர் ஜெனரல் இஸ்மயில் கானி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரான் அரச தலைவர் அயதுல்லா அலி கமேனி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

குட்ஸ் படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள இஸ்மயில் கானி இந்தப் படைப் பிரிவின் துணைத் தளபதியாக இருந்து வந்தவராவார்.

கொல்லப்பட்ட தளபதி காசிம் சுலைமானி முன்னெடுத்த சிறப்பான பணிகளை புதிய தளபதி தொடர்ந்து முன்னெடுப்பார் என நம்புவதாக ஈரான் அரச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள கானி 1997 இல் ஈரானின் புரட்சிகர காவலர்களின் வெளிநாட்டுப் பிரிவான குட்ஸ் படையின் துணைத் தளபதியாக நியமனம் பெற்று அப்படைப் பிரிவில் நீண்ட காலம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -