மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வு .






பைஷல் இஸ்மாயில் -

ல் நஜா விளையாட்டுக் கழகமும், அல் நஜா இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும் ANPL - 2020 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அல் நஜா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் முஹம்மட் இத்ரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த சுற்றுத் தொடரை ஆரம்பித்து வைத்து வைப்பதற்காக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம், ஆப்தீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், அல் ஜெஸீறா வித்தியாலயத்தின் அதிபரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஐ.எம்.றியாஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இந்த சுற்றுத் தொடர் யாவும் அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவு கடற்கரை அல் நஜா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -