கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் உள நலப் பிரிவின் ஏற்படாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) 17 ஆம் திகதிமுதல் 18, 19ம் திகதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3மணி வரை 'உள ஆரோக்கியம்'அறிவூட்டல் கண்காட்சி – 2020 நடைபெறவுள்ளது.
சிறுவர் மற்றும் கட்டிளம் பருவத்தினர் எதிர்நோக்கும் உளநலப் பிரச்சினைகளும்போதைப் பொருள் பாவனையின் தீங்குகளும்உள நோய்கள் பற்றிய விளக்கங்களும்உள ஆற்றுப ;படுத்தல் சிகிச்சை முறைகளும்பால் நிலை வன்முறை ஒழிப்பு தொடர்பான தெளிவூட்டல்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
தரம் 6 இற்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏனைய
பொது மக்கள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு கல்முனை ஆதார
வைத்தியசாலை நிருவாகம் அறிவித்தல் விடுக்கிறது.