துறைமுக நகரம் முதலீட்டுக்காக நேற்று திறக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், நகர அபிவிருத்தி அதிகார சபை அனைத்துத் திணைக்களங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்போது மதீப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை நிலப்பரப்பிற்குள் புதிதாக 69 ஹெக்டயர் நிலப்பரப்பை ஒன்றிணைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக அமைச்சர் கருத்து வெளியிட்டார். தற்போது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரத்தை நிர்வகித்தல் மற்றும் வரி நிவாரணம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முதலீட்டுச் சபை மற்றும் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
சீரற்ற காலநிலையினால், சில நகரங்கள் தாழிறங்கும் நிலை உருவாகியுள்ளதால் அதனைச் சீர்செய்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
