நாவிதன்வெளி பிரதேசத்தில் இலவச மின்சார இணைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

எம்.எம்.ஜபீர்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீனின் நிதி ஒதுக்கீட்டில் நாவிதன்வெளி பிரதேசத்தில் இலவச மின்சார இணைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி மத்திய குழுவின் ஏற்பாட்டில் சாளம்பைக்கேணி-04 பல்தேவைக் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி மத்திய குழுவின் தலைவர் ஏ.எம்.மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச மத்திய குழுவின் செயலாளர் எம்.எச்.கபீர், பொருளாளர் ஏ.எம்.ஐ.ஹஸன், மத்தியகுழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இலவச மின்சார இணைப்பு 62 குடும்பங்களுக்கும், 3பாலர் பாடசாலைக்கு தளபாடங்களும், 4விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், 2சமூக தொண்டு அமைப்புகளுக்கு தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -